திருச்சிராப்பள்ளி,ஆக, 21- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய கூலி உயர்வை வழங்காததை கண்டித்தும். 1.6.2024 முதல் பழக்கடை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி உயர்வை உடனே வழங்க வலி யுறுத்தியும் சி.ஐ. டி.யு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் பழக்கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழக்கடை சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கோ ரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சுமைப் பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக் குமார், மாவட்டத் துணைத் தலைவர் பாரதி, பழக்கடை சங்க செயலாளர் கார்த்திக், லாரி செட் சங்க செயலாளர் ராமர், வழக்கறிஞர் சங்க செயலாளர் ரங்கராஜன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.