districts

கடைமடை பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார கோரிக்கை

பேராவூரணி, ஏப்.28-  

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரா வூரணி ஒன்றியக் குழு கூட்டம் சி.ஆர்.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் (பொ) ரெங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கோ.நீலமேகம் சிறப்புரையாற்றினார்.

   கூட்டத்தில், கடைமடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி யில், பாசன வாய்க்கால்கள், ஆறு, ஏரி,  குளங்கள், வரத்து வாய்க்கால்கள் முழுமை யாக தூர்வார வேண்டும். பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில் களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும். தொழிற் தினமான மே 1 அன்று  அனைத்து இடங்களிலும் செங்கொடி ஏற்று வது’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.