districts

img

நூறு நாள் வேலையை தொடங்குக! விவசாயத் தொழிலாளர் சங்கம் மனு

நாகப்பட்டினம்/தஞ்சாவூர்,  ஜூன் 13- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க கோரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து, அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்  சார்பில் மனு கொடுக்கப்பட்டது.  அம்மனுவில், “விவசாய கிராமங்கள் நிறைந்த பகுதி நாகப்பட்டினம் மாவட்டம்.  இந்த மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம்  நூறு நாள் வேலை தொடங்க வேண்டியி ருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருந்ததால், நூறு நாள் வேலை  வழங்கவில்லை. இந்நிலையில் காவிரி யில் நீர் வராத காரணத்தாலும், தொடர்ந்து  வேலையில்லாத காரணத்தாலும் மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.  விவசாயத்தை நம்பி வாழும் மக்க ளுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் இல்லா மல் இருக்கும்போது நூறு நாள் வேலை திட்டம்தான் கை கொடுத்து வந்தது.  ஆனால் அது தொடங்கப்படாமல் இருப்பது,  மக்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி யாக இதில் தலையிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நூறு நாள் வேலையை தொடங்க உத்தரவிட வேண்டும். மக்களின் அன்றாட வாழ்விற்கு  உறுதுணையாக இருந்து வரும் நூறு  நாள் வேலை திட்டத்தை வழங்குவதன் மூலம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து  விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட  கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதா ரத்தை உத்தரவாதப்படுத்த முடியும்” என தெரிவித்திருந்தனர்.  இந்த மனு கொடுக்கும் நிகழ்வில், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டத் தலைவர் ஏ.வேணு, விதொச மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. செந்தில்குமார், டி.துரைராஜ், ஏ.சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில், தஞ்சாவூர்  மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் தோகூரில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி தலைமையிலும், திருச்சென் னம்பூண்டியில் மாவட்டக் குழு உறுப்பி னர் பி.கலைச்செல்வி தலைமையிலும், 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கப் பட்டது.  இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பாஸ்கரன், கிளைச் செயலாளர் எம். அகிலா, இ.பன்னீர்செல்வம் மற்றும் நூறு  நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நூறு நாள் வேலைக்கான கூலியை குறைக்காமல் வழங்குக!
வி.தொ.ச அரியலூர் பேரவை வலியுறுத்தல்

அரியலூர், ஜூன் 13 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் தா.பழூர் துவக்கப் பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கந்தசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகா, ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், தா.பழூர் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலைக்கான கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் எடை குறையாமல் வழங்க வேண்டும்.  மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்சன், திருமண உதவித் தொகை, மருத்துவம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் மீனா நன்றி கூறினார்.