districts

img

மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் பள்ளி மாணவி பலி திருச்சிராப்பள்ளியில் பெற்றோர், சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.1 -

       மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.  இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் வசித்து  வருபவர் சுமைதூக்கும் தொழிலாளி அழகப்பன். இவரது மகள் ஜெகஜோதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று காலை  அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் ஜெக ஜோதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். இவர்கள் சிந்தாமணி பஜார் வெனீஸ் தெரு அரு கில் வந்து கொண்டிருந்தனர். இந்தச் சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது.  

     இதனால் நிலை தடுமாறிய இவர்களது வண்டி மீது, பின்னால் வேகமாக வந்த தனியார்  பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்த ஜெக ஜோதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது சகோதரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.  

     பாதாளச் சாக்கடை பணிகளுக்கு தோண்டப்  பட்டு குழிகள் சரியாக மூடப்படாததாலும், போது மான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்காமல், பல மாதங்களாகியும் குடிநீர்  குழாய் பதிக்கும் வரை சாலை அமைக்காமலும் இருந்ததே இந்த விபத்துக்கும், உயிர் பலிக்கும் காரணமாகும்.   

    எனவே சாலை விபத்தில் உயிரிழந்த ஜெக ஜோதி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.  உடனடியாக அனைத்து சாலைகளையும் சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜெகஜோதி  உடலை வாங்க மறுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்  கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலு வலகத்தை செவ்வாயன்று காலை முற்றுகை யிட்டு நடத்திய போராட்டத்தில், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின், மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாதர், வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     பின்னர் ஆர்டிஓ பார்த்திபன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆட்டோ சங்க  மாவட்டச் செயலாளர் மணிகண்டன், சுமைப் பணி சங்க ராமர், ஜெகஜோதியின் தந்தை அழ கப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

   பேச்சுவார்த்தையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பழு தடைந்த சாலைகளை செவ்வாயன்று இரவே சரி செய்வது. விபத்திற்கு காரணமான பேருந்து  நிறுவனத்திடம் இருந்தும், பாதாளச் சாக்கடை பணிக்கான ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்தும் ரூ.4 லட்சம் இழப்பீடு பெற்று மரணமடைந்த ஜெகஜோதி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது.  

    மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக ஜெகஜோதியின் சகோதரருக்கு பணி ஆணை வழங்க ஆவன செய்வது. முதலமைச்சர் நிவா ரண நிதியை மாவட்ட ஆட்சியர் மூலமாக பெற பரிந்துரைப்பது என முடிவு செய்யப் பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யொட்டி போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.

   பின்னர் மாணவியின் உடலை உடற் கூராய்வு செய்து பெற்றுக் கொள்ள பெற்றோர் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.