districts

img

தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி சார்பில் செப்.14 முதல் அக்.2 வரை தூய்மை சேவை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பேரூராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணி நடந்தது. பள்ளி மாணவர்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்றத் தலைவர் புனிதவதி, துணைத் தலைவர் அழகேசன், செயல் அலுவலர் பழனிவேல், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.