தஞ்சாவூர், ஜூலை 28-
திருச்சிராப்பள்ளி ரயில் சந்திப்பில், இருப்புப் பாதை பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால், கீழ்க்காணும் விபரப்படி ரயில்கள் மாற்றுப் பாதையில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக இயங் கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு, வண்டி எண்.16847/16848 மயி லாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் தஞ்சாவூர் - திருச்சி - திண்டுக்கல் - மதுரை பாதைக்கு பதிலாக, திருவாரூர் - பட்டுக் கோட்டை- காரைக்குடி - சிவகங்கை - மானா மதுரை - அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலைய நிறுத்தங்களுடன், திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் வழியாக இயக்கப்படும். ஜூலை 31 (திங்கட்கிழமை) அன்று காலை 9 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்:16127) விழுப்புரம் - மயிலாடுதுறை - திரு வாரூர் - காரைக்குடி - மானாமதுரை - விருது நகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப் படும்.
இந்த ரயில் கடலூர் துறைமுகம், மயி லாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஜூலை 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ராமநாதபுரம் - புவனேஸ்வரம் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20895) காரைக்குடி -பட்டுக் கோட்டை - திருத்துறைப்பூண்டி - திருவா ரூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஜூலை 30 அன்று பனாரஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பனாரஸ் - ராமநாதபுரம் அதிவிரைவு ரயில் (வண்டி எண்.22536) 1-8-2023 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 1.20 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து, தஞ்சாவூர் - திருச்சி பாதைக்கு பதி லாக, திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக் குடி - மானாமதுரை வழியாக மாற்றுப் பாதை யில் ராமநாதபுரம் செல்லும். இந்த ரயில் திரு வாரூர் மற்றும் பட்டுக்கோட்டை ரயில் நிலை யங்களில் நின்று செல்லும்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக் கோட்டை - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் மாற்றுவழியில் இயக்கப் படும் மேற்கண்ட விரைவு ரயில்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.