பேராவூரணி, ஏப்.27-
வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து, தென்னை யில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆய்வு முகாம் நடை பெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் சுருளிராஜன் சிறப்புரை யாற்றினார்.
இதில், தென்னையைத் தாக்கும் பூச்சிகளான காண்டா மிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைப்புழு ஆகி யவை குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்தும் தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தென்னையை தாக்கும் அதிதீவிர நோய் களான தஞ்சை வாடல் நோய், குருத்தழுகல் நோய் மற்றும் தென்னை நுண்ணூட்டச் சத்தால் பாதிக்கப்படும் தென்னைக்கு நுண்ணூட்டம் வழங்குவது குறித்தும், போர்டோ கலவை தயாரிப்பது குறித்தும், எருக்குழி யில் மெட்டாரைஷியம் உயிர் பூசணம் இடுதல், ஒருங்கி ணைந்த உர மேலாண்மை, வேர் மூலம் ரசாயன மருந்து செலுத்துதல் ஆகிய அனைத்து தொழில்நுட்பங் களையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. இதில் பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.