பாபநாசம், ஜூலை 2-
கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக பாபநாசம், ராஜகிரி, அய்யம்பேட்டையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்தச் சாலையில் பாபநாசத்திலிருந்து அய்யம்பேட்டை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. கும்பகோணம் மகாமக நிகழ்ச்சிக்குப் பின் தற்போதுதான் இச்சாலை போடப்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், பாபநாசத்தில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.