districts

img

புதுகை அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

பொன்னமராவதி,மே 30- புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை நடைபெற்றது.  சிறப்பு பேரவைக்கு தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் ஸ்ரீதர், சங்கத்தின் மாவட்ட தலை வர் விஜயலெட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரா ஆகியோர் பேசினர்.  இதில் பொன்னமராவதி வட்டாரத்  தலைவராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவராக பாண்டிச்செல்வி, செயலா ளராக மலர், துணைச் செயலாளராக கோமதி, பொருளாளராக சரஸ்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொறுப்பு மையம் மற்றும் மெயின் மையம் ஆகியவற்றிற்கு புதிய கைப்பேசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;