அரியலூர், ஜூலை 20-
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த கொடுக்கூரில் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த கொடுக்கூர் பேருந்து நிறுத்தத்தில், புதன்கிழமை மாலை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் மயிலாடுதுறை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், வாக னத்தை ஓட்டி வந்தவர் நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரை அடுத்த பெரிய பாளையம் பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும், வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரசி கடத்தி வந்திருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.