தேனி, ஏப்.27-
நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடைமழை பெய்து வருவ தால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது . முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மழையளவு
பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளை யம் 7.2, சண்முகா நதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீர பாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.