districts

புளியஞ்சேரி இருவழிச் சாலையாக அகலப்படுத்த வலியுறுத்தல்

கும்பகோணம், ஆக.27 -

       கும்பகோணம், புளியஞ்சேரி பகுதியில் சாலையை மறித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை பாபநாசம் எம்எல்ஏ ஜவா ஹிருல்லா ஆய்வு செய்தார்.

     தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரம்பரிய பெருமைகளை கொண்ட மாநில நெடுஞ்சாலை (SH-22) வகையைச் சேர்ந்த கல்லணை - பூம்புகார்  சாலை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியை தொட்டுச் செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே,  கும்பகோணம் அருகே புளியஞ்சேரி பகுதியில் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை, அருகிலுள்ள மேம்பாலத்திற்கான அணுகு சாலையாக மாற்றி அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை சுவாமிமலை மற்றும் அதனைச்  சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

     மேலும் சுவாமிமலை கோவிலுக்கு செல்ப வர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.  இதனை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி அமைப்பதால், இவ்வழியில் செல்லும் அனை வரும் மாற்று வழியில் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் தடுப்பை  அகற்றி, நேர்வழி அமைக்குமாறு அரசு  மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதி காரிகளிடம் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் மூலம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

     மேலும் இந்த பிரச்சனை குறித்து தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசியிருக்கிறார்.

    தற்போது அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பால அணுகு சாலையின் கீழ்  அகலக் குறைவாக ஒருவழிப்பாதை அமைக்க முயற்சி நடக்கிறது. அகலம் குறை வான சாலை போக்குவரத்திற்கு மிகுந்த சிர மத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த பாதை யின் இடையே அகலமான இரு வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று, கல்லணை பூம்புகார்  சாலை தடுப்பு நீக்கும் குழுவினர் கோரிக் கையை முன்வைத்துள்ளனர்.

    அந்த குழுவினருடன், புளியஞ்சேரி பகுதிக்கு சென்று பாபநாசம் சட்டமன்ற உறுப்பி னர் ஜவாஹிருல்லா பார்வையிட்டார். இந்த பகுதி யில் அகலமான இருவழி சாலை அமைக்க வேண்டுமென்ற‌ மக்களின் கோரிக்கையை உரிய துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு  செல்வதாக உறுதியளித்தார்.