புதுக்கோட்டை, ஜூலை 20-
நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஓய்வூதி யத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவல கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் சி.அன்புமணவாளன், மாவட்ட பொதுச் செயலாளர் க.ரெத்தின வேல், சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு மற்றும் நிர்வாகிகள் பழனிவேலு, சாந்தார், செல்வராஜ், சரவணன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.
நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், நல வாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறை களை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாகப் பணப்பலன் களை வழங்க வேண்டும். பெண் கட்டு மானத் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.