districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளால் களைகட்டுகிறது

புதுக்கோட்டை, ஆக 3-

      தினம்தோறும் மாலையில் நடை பெறும் பள்ளி மாணவ, மாணவி களின் கலைநிகழ்ச்சிகளால் களை கட்டி வருகிறது புதுக்கோட்டை புத்த கத் திருவிழா.

      புதுக்கோட்டை 6-ஆவது புத்த கத் திருவிழாவில் ஏராளமான வாச கர்களை, பொதுமக்களை, மாண வர்களை ஈர்க்கும் வகையில் பல்  வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. பகலில் விஞ்ஞாணிகளுடனான கலந்துரையாடல், கோளரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளால் மாண வர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் வந்துசெல்கின்ற னர். மாலையில் மிகச்சிறந்த இலக்  கிய ஆளுமைகள், கல்வியாளர்கள், கருத்தாளர்களின் உரை புத்தகத் திரு விழாவில் நல்ல தாக்கத்தை ஏற் படுத்தி உள்ளது.

   இதன் ஒருபகுதியாக தினம்  தோறும் மாலையில் பள்ளி மாண வர்களின் கலை நிகழ்ச்சிகளில் அரசு,  அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். கல்வியின் அவசியம், சுற்றுச்சூழல், விழிப்புணர்வு, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    மாணவர்களின் கலை நிகழ்ச்சி களைப் பார்ப்பதற்காகவே தினந் தோறும் கணிசமான பகுதியினர் புத்த கத் திருவிழாவிற்கு வந்து செல் கின்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளால் புத்தகத் திருவிழா களைகட்டி வருகிறது என்றே சொல்லலாம். கலை நிகழ்ச்சிகளை அறிவியல் இயக்க நிர்வாகிகள் மா. குமரேசன் ஒருங்கிணைத்து வரு கிறார்.