districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்குவதா?

சிஐடியு கண்டனம் திருச்சிராப்பள்ளி, ஜன.19 - சிஐடியு திருச்சி மாநக ராட்சி தொழிலாளர் சங்க  மாநகர் மாவட்டச் செயலா ளர் மாறன் மாநகராட்சி  ஆணையர் வைத்திநாத னுக்கு அனுப்பி உள்ள  கடிதத்தில் கூறியிருப்ப தாவது: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் வரு வதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம் நடந்துள்ளது- தூய்மை பணியாளர்களை அலட்சிய மாக கருதி, சுகாதாரமற்ற முறையில் உணவை  கொண்டு சென்ற துறை சார்ந்தவர்களை யும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும்  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று மீண்டும் நடக்காத வகையில் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.