districts

img

இராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய யாத்திரைகளுக்கு இலவச தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருக!

இராமேஸ்வரம், ஜூன் 25-

     தமிழ்நாடு சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முரு கன் எம்எல்ஏ தலைமையிலான குழு  வெள்ளியன்று இராமேஸ்வரம் வந்தது. அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதி முக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

    இராமேஸ்வரத்திற்கு யாத்தி ரைகள் கொண்டு வரும் கங்கை தீர்த்  தத்தை வைத்து பூஜை செய்யும்  இடத்தை மாற்றும் போக்கினை கை விட வேண்டும். உள்ளூர் பொதுமக்  களும் வரக்கூடிய யாத்திரைகளும் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்  வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்  டும். ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு கட்டணம் ரூ 200 -ஐ ரத்து செய்ய  வேண்டும். நீண்டகாலமாக சுவாமி களை பல்லாக்கில் தூக்கிச் செல் லும் ஊழியர்களுக்கு ஊதியத்தை. உயர்த்திக் கொடுப்பதோடு அவர்  களை அவமதிக்கும் போக்கு கண்  டிக்கப்பட்டது. பிர்லா காட்டேஜ் அருகில் பல மாதங்களாக மூடியே  கிடக்கும் கழிப்பறையை திறப்ப தற்கு நடவடிக்கை எடுப்பதோடு, வடக்கு வாசல் பகுதியில் புதிதாக  கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்க ளாக மூடி கிடக்கும் கழிப்பறை களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரக்கூடிய யாத்திரைகளுக்கு இலவசமாக தங்கும் வசதியை ஏற் படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

   இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா,  காங்கிரஸ் கட்சி நகர் நிர்வாகி ராஜீவ் காந்தி, சிபிஐ தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக இளைஞ ரணி துணைச் செயலாளர் கராத்தே  பழனிச்சாமி, நகரச் செயலாளர்  வெள்ளைச்சாமி, தமிழக வாழ்வுரி மைக் கட்சி இளைஞரணி நிர்வாகி ஜெரோன்குமார், மனிதநேய மக் கள் கட்சி நகர் செயலாளர் இப் ராம் ஷா ஆகியோர் மனுவில் கை யெழுத்திட்டனர்.

   மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30 அன்று பேருந்து நிலையம் எதிரே மாபெ ரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.