பொன்னமராவதி, ஏப்.20-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் பாரம்பரியமிக்க அமரகண்டான் குளத்தைப் பாதுகாக்கக் கோரியும், பொன்ன மராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு துண்டுப் பிர சுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.
பிரச்சாரத்திற்கு, ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, குமார், சாத்தையா, பாண்டியன், மதியரசி, பாஸ்கர், கட்டியாண்டிபட்டி குமார், பி.உசிலம்பட்டி துணைத்தலைவர் ஆனந்த் உள்ளிட்டோ ரால் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.