districts

img

போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

திருவாரூர், ஜூலை 21 -

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இப்பேரணி ஓகை ஆற்றுப் பாலத்தில் இருந்து துவங்கி, குடவாசல் பேருந்து நிலையம், கடைவீதி வழியாக பெண்கள் பள்ளியை வந்தடைந்தது.  

   பின்பு, பள்ளி வளாகத்தில் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஆர்.பிரபா கரன் தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் ஆர்.முரு கேசன் முன்னிலை வகித்தார். குடவாசல் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி முருகே சன், துணைத்தலைவர் குணசேகரன் மற்றும்  மன்ற உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்  கழகத்தின் நிர்வாகிகள் ஏ.கே.டி.சேரன், ஆதித்யா பாலு, குடவாசல் காவல் ஆய்வா ளர் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.