districts

img

தோகைமலையில் மனுக்கொடுக்கும் போராட்டம்

கரூர், செப்.13- மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  கரூர் மாவட்டம் தோகை மலையில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தோகைமலை ஒன்றி யம், கருப்பகோவில் தெரு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், “கருப்பகோவில் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன.  இப்பகுதியில் சுகாதார வளா கத்துடன் கூடிய கழிப்பறை,  சாக்கடை வசதி செய்துதர வேண்டும். காவிரி குடிநீர்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோகைமலை பேருந்து நிலையத்தில் கட்டி  முடிக்கப்பட்ட கழிப்பறை யைத் திறக்க வேண்டும், பேருந்து நிலையத்தில் பய ணிகளுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண் டும்,  கட்டணத்துடன் கூடிய  இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்க வேண டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  கே.சக்திவேல், தோகைமலை ஒன்றியச்  செயலாளர்  ஏ.சுப்பிரமணி யன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.பெருமாள், டெய்லர்   முருகேசன் கருப்பக் கோவில் தெரு கிளை உறுப் பினர்கள் ஆர். சண்முகம், எஸ்.நாகராஜ், கே.மணி மற்  றும் கருப்பக்கோவில் தெரு  மக்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  இரண்டு மாத காலத்துக்குள் கருப்பசாமி கோவில் தெரு மக்களுக்கு சுகாதார வளா கத்துடன் கூடிய கழிப்பறை  கட்டிக்கொடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று  ஊராட்சி மன்றத் தலைவர்  உறுதியளித்தார்.