districts

img

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக: ஓய்வூதியர்கள் கறுப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.13- அரசு ஊழியர், ஆசிரி யர்களுக்கு தேர்தல் நேரத் த்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண் டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வேண்டும். காப்பீட்டுத் திட் டத்தில் முழுமையான பய னைப் பெற முடியாததால், அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் அரசு தணிக் கைப் பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை, திருவாரூரில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தி னர் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் மு. முத்தையா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் ம. வெள்ளைச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் அ. மணவாளன், இரா. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் துறை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் து. அய்யப்பன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலர் கு. சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். திருவாரூர்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலை வர் இரா.தமிழரசன் தலை மை வகித்தார். மாநில செயலாளர் குரு.சந்திர சேகரன்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயலாளர் வீ.முனியன், துணைத்தலைவர் பி.ஜெக வீரன், பொருளாளர் கோ. மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.