தஞ்சாவூர், ஜூலை 23 - திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்கம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்யும் காதலனிடம் இருந்து, தனது மகளை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பெற்றோர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரு கில் உள்ள குப்பத்தேவன்வலசை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - ராணி தம்பதி. இவர்களது மகள் கார்த்திகா திருப்பூ ரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்த மேற்குவங்க மாநிலம் மேற்கு மிதி நிபூர் மாவட்டம் ஜாராபாரா ஜாரா கிராமத்தைச் சேர்ந்த தீபங்கர் ஜனா என்பவரை காத லித்து வந்ததாக கூறப்படுகிறது. தீபங்கர் ஜனா கார்த்திகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மேற்குவங்கம் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத் தில் என் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கார்த்திகா தனது பெற்றோரை தொலைபே சியில் தொடர்பு கொண்டு, “என்னை இங்கு கொடுமைப்படுத்துகிறார்கள். உணவு அளிப் பதில்லை. எனவே என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்” என பேசியுள்ளார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் சிக்கி தவிக்கும் எனது மகளை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் தஞ்சை மாவட்ட ஆட்சி யர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்த னர்.