தஞ்சாவூர், மார்ச் 22 - பொதுமக்கள் அச்ச மின்றி வாக்களிக்கவும், தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவும், பாது காப்பு தொடர்பாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையி லும், காவல்துறை துணை ராணுவ படையினர் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். மேலும் காவல் துறையின் வஜ்ரா வாகன மும் இடம்பெற்றது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பேராவூ ரணி நீலகண்டப் பிள்ளை யார் ஆலயம் முதல் முக்கிய சாலைகள் வழியாக வட்டாட் சியர் அலுவலகம் வரை அணிவகுப்பு நடைபெற்றது. பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பா.பசுபதி, உதவி ஆய்வாளர் புக ழேந்தி, துணை ராணுவப் படை அலுவலர் ஓம்வீர்சிங் தலைமையில் நடை பெற்ற பேரணியில், காவல் துறையினர், துணை ராணு வப் படையினர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அய்யம்பேட்டையில் துணை ராணுவத்தினர், போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. பாபநாசம் துணை காவல் கண்காணிப் பாளர் அசோக் தலைமை யில் நடந்த அணிவகுப்பில், ஆய்வாளர் ஐஸ்வர்யா, உதவி ஆய்வாளர்கள் குமார், ஜெகஜீவன், போது மணி மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத் தினர், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு போலீசார் பங்கேற்றனர். பேரணி அய்யம்பேட்டை மதகடி பஜாரில் தொடங்கி பசுபதி கோவிலை சென்றடைந்தது.