தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் சுந்தரவேலு 21 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.