தஞ்சாவூர், ஜூன் 30-
ஒன்றிய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை, 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படு கிறது.
இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது. 14 ஆவது தவணை ஊக்கத்தொகை பெற, ஆன்-லைனில் விவசாயி கள் தங்களின் விபரங்களை பதிவு செய்யும் முறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பதிவு செய்யாத உடனே பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால்தான் 14 ஆவது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவ சாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14 ஆவது தவணையை சரியாக பெற்று பயன்பெறலாம்.
முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan .gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில் ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.
இ-கே.ஒய்.சி பதிவு செய்திடாத விவசாயிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.