districts

img

பொலிவுறு நகரத்தில் வழிந்தோடும் கழிவுநீர்

தஞ்சாவூர், ஆக.28 - தஞ்சாவூர் விளார் பிரதான சாலை, லாயம் பகுதியில் புதை சாக்கடையில் இருந்து வழிந்தோடும் கழிவு நீரை, சாலையில் வெளியேறாதவாறு சீர மைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக  லாயம் சாலையில் உள்ள 3-க்கும் மேற்பட்ட புதை சாக்கடையில் இருந்து  கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந் தோடி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை  புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள் ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள்  என அனைவரும் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகராட்சி 35 ஆவது  வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.வை ஜெயந்திமாலா தலைமையில், முன்னாள் உறுப்பினர் த.முருகேசன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என். குருசாமி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் இ.வசந்தி, மாநகரச் செயலாளர்  எம்.வடிவேலன், சிஐடியு முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாநகரக் குழு உறுப்பினர் கோஸ்கனி மற்றும்  அப்பகுதி பொதுமக்கள் திரண்டு, விளார் பிரதான சாலை, லாயம் பகுதி யில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு, கண்டன முழக்கமிட்டனர். அப்போது அந்தச் சாலையில், கொல்லாங்கரையில் இருந்து தஞ்சா வூரை நோக்கி வந்த அரசுப் பேருந்தை  மறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தை தொடர்ந்தனர்.  தகவலறிந்த, தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும்  மாநகராட்சி பொறியாளர் ரமேஷ் ஆகி யோர் உடனடியாக சீர் செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியல்  கைவிடப்பட்டது.  புதை சாக்கடையில் இருந்து வழிந் தோடும் கழிவு நீரை சீரமைக்கா விட்டால் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித் துள்ளனர்.