கரூர், ஏப்.19 - 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 அன்று நடைபெறுவதை யொட்டி, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப கோணம்) லிட் சார்பில் 1220 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்து கள் இயக்கம் குறித்த ஆலோச னைக் கூட்டத்தின்படி, போக்கு வரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி தலைமையில் ஏப்.8 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஏப்.19 (வெள்ளிக் கிழமை) நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோ ணம்) லிட் சார்பில் ஏப்.17, 18 தேதி களில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. இச்சிறப்பு பேருந்துகள் சென் னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரிய லூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராம நாதபுரம், மதுரை ஆகிய இடங் களுக்கும், திருச்சியிலிருந்து தஞ்சா வூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக் குட்பட்ட அனைத்து முக்கிய நக ரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து முக்கிய நகரங் களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் தேவை க்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏப்.17, 18 தேதிகளில் சென்னை யிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்கா லிக பேருந்து நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன் னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா (MEPZ)பேருந்து நிலை யத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங் கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, இராமநாதபுரம், இரா மேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் திண்டி வனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக மயிலாடுதுறை, சிதம் பரம், சீர்காழி, திருவாரூர், திருத் துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி தட பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற் றாண்டு (KCBT) பேருந்து நிலை யத்திலிருந்தும் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக காரைக்கால், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, சீர்காழி, திருத் துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் (CMBT) பேருந்து நிலையத்தி லிருந்து இயக்கப்பட உள்ளன. மேலும், தேர்தல் மற்றும் வர விடுமுறை முடிந்து திரும்ப அவர வர் ஊர்களுக்குச் செல்ல ஏப்.20, 21 ஆகிய நாட்களிலும் சிறப்பு பேருந்து கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஏப்.17, 18 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மேற்படி இடங் களுக்கு 1220 சிறப்பு பேருந்து களும்,
கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்குடி தடங் களில் 1970 சிறப்பு பேருந்துகளும், அதேபோன்று தேர்தல் முடிந்த பின்னர் ஏப்.20, 21 நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1300 சிறப்பு பேருந்துகளும் பிற தடங்க ளில் 1980 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர் கள் மற்றும் பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக் காக ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்கம் குறித்து தொடர்ந்து ஒலி பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்ப தோடு, பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழ கங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க வசதி யாகும். அனைத்து போக்கு வரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்ப டும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android/ I-phone கைப்பேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட சிறப்பு பேருந்து களின் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.