districts

மதிமுக சார்பில் பேராவூரணி அருகே ஆவணம் கைகாட்டி கடைவீதியில் கை யெழுத்து இயக்கம் நடை பெற்றது

தஞ்சாவூர், ஜூலை 15 -

     தமிழ்நாடு ஆளுநர் பொறுப் பில் இருந்து ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் பேராவூரணி அருகே ஆவணம் கைகாட்டி கடைவீதியில் கை யெழுத்து இயக்கம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, மதிமுக  புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் கே.எஸ்.கலியமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர்  செங்கோடன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத் தார். இதில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள், கடைவீதி வியா பாரிகள் கலந்து கொண்டு கை யெழுத்திட்டனர்.