புதுக்கோட்டை, ஜூலை 2-
குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் ஞாயிற்றுக் கிழமை பரிதாபமாக உயிரி ழந்தனர்.
புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே இரும்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கூத்தா ணிப்பட்டி. இக்கிராமத்தில் வசிக்கும் பாண்டின்-சிவ ரஞ்சனி தம்பதியினருக்கு நிவேதாஸ்ரீ(7), தஷ்விகா(2) ஹரணி (8 மாதம்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ள னர்.
இந்நிலையில், அதே ஊரில் கல்குவாரிக்காக வெட்டிய பள்ளத்தில் வழக் கம்போல குளிப்பதற்காக சிவரஞ்சனி தனது மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். குளிக்கும் போது நிலைதடுமாறி சிவ ரஞ்சனி மற்றும் மூன்று குழந் தைகளும் ஆழமான பள்ளத்தில் நீரில் மூழ்கிய தாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் நீரில் மூழ்கிய வர்களை காப்பாற்றுவ தற்காக அவர்களை வெளியே தூக்கியுள்ளனர். இதில் நிவே தாஸ்ரீ (7), ஹரிணி (8 மாதம்) ஆகிய இரண்டு சிறு மிகளும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்து விட்ட னர். ஆபத்தான நிலையில் தாய் சிவரஞ்சனி (32) தஷ்விகா (2) ஆகியோர் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
தகவலறிந்து, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருப வர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், மருத்துவ மனையில் இருப்பவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும், நடந் துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவும் அறி வுறுத்தினர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.