கும்பகோணம், மே 6-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனீவாச இராமானுஜன் மையத்தில், தீட்டா -23 என்ற தேசிய அளவிலான தொழில் நுட்ப மேலாண்மைத் திருவிழா மே 5 முதல் 7 வரை நடை பெறுகிறது.
நிகழ்வை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவ னத்தின் இணை பொதுமேலாளர் சிவசங்கரன் துவக்கி வைத் தார். மின்னியல், மின்னணுவியல், மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், உயிர் வேதியியல். நுண்ணுயிரியல், குறும்படம், எந்திரவியல் ஆகிய 11 பிரிவுகளில் 55 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக. தீட்டா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தர்மலிங்கம் வரவேற்றார்.
சீனீவாச இராமானுஜன் மையப் புலத்தலைவர் இராமசாமி நினைவுப் பரிசினை வழங்கி னார். இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நரசிம்மன், இணைபுலத்தலைவர் பேராசிரியர் அல்லிராணி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.