districts

img

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைத்திடுங்கள்!

தஞ்சாவூர், செப்.10 -  தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத கடை கள், நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளா கத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாண வர் எழுச்சித் தமிழ் மாநாட்டின் நிறைவு விழா வில் அவர் பேசியதாவது: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு  தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரசு அலுவல கங்களில் ஆட்சிமொழி தமிழ் என்பதை உறுதி செய்யும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் 85 சதவீதம் ஆட்சி மொழித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள்  தமிழில் உள்ளதா என ஆய்வு செய்யப்படு கிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவ னங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்  அதிகாரம் தொழிலாளர் துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுடன் கலந்து பேசியுள்ள தால், இரு துறைகளும் இணைந்து எடுக்கும் நட வடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். தற்போது தமிழில் பெயர் பலகை வைக்கப் படாத கடைகள், நிறுவனங்களுக்கு விதிக்கப்ப டும் அபராதத் தொகை ரூ.50 என உள்ளதை  ரூ.2 ஆயிரமாக உயர்த்துமாறு உயர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதேபோல, குடியிருப்பு அடுக்ககங்கள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர்  சூட்ட ஊக்குவிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்  துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக் கப்பட்டது. இதன் அடிப்படையில் அதற்கான நட வடிக்கை செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். பின்னர், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், உலகத் தமிழ்ப் பெயர் கள் பேரியக்கத்தை தொடங்கி வைத்து, பெயர்  பலகையைத் திறந்து வைத்தார். மாநாட்டில் அரசு,

அரசு உதவிபெறும் பள்ளி களைப் போல அனைத்து நிலைப் பள்ளிகளி லும் தமிழைப் பகுதி ஒன்று பாடமாக வைப்பதற்கு  அடுத்த கட்டமாக ஆணையிட வேண்டும். அனைத்து கோவில்களிலும் வழிபாட்டுச் சடங்கு கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்ற அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடி களார் தொடங்கி வைத்தார்.  தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், அனைத் திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை செயல் தலை வர் இரா.முகுந்தன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி.தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப்  பேரவைத் தலைவர் செ.துரைசாமி வரவேற்றார்.  தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவர் கா.ச. அப்பாவு நன்றி கூறினார்.