districts

img

முறிந்து விழும் நிலையில் மரக் கிளைகள்: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பாபநாசம், ஜூன் 2 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின்  சாலை முக்கிய நெடுஞ்சாலையாகும். இதில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு பாபநாசம்  மெயின் சாலையை ஒட்டி மரம் ஒன்று  உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் சாலையை நோக்கி தாழ்வாக உள்ளன. அரித்த நிலையில் உள்ள இந்த  மரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுமோ என்ற பயத்துடன் வாகன ஓட்டி கள் சாலையை கடந்து செல்கின்ற னர். பலத்த காற்றின் போது, மரத்தின்  சிறு சிறு கிளைகள் முறிந்து சாலையில்  செல்லும் வாகன ஓட்டிகளின் தலையில் விழு கின்றன. எனவே முறிந்து விழும் நிலையில் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப் படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதேபோன்று தாராசுரம் தொடங்கி தஞ்சாவூர் வரை சாலையோரம் உள்ள பட்டுப்  போன மரங்களை அப்புறப் படுத்துவதுடன்,  ஆபத்தான நிலையில் உள்ள மரத்தின் கிளை களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கின்றனர்.

;