districts

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் நவ.26 ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

தஞ்சாவூர், நவ.12 -  ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு, ஒருங்கி ணைப்பு குழு சமவெளி சு.பழநிராசன் தலைமை வகித்தார். மாநில ஒருங் கிணைப்பு குழு சாமி.நட ராஜன், காளியப்பன், மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன், ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதில், “விவசாயி களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாகவும், மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் 2020 நவம்பர் 26  அன்று உழவர்கள் தில்லி யில் முற்றுகைப் போராட் டத்தை நடத்தினர். அதன் 2-வது ஆண்டு தொடக்க நாளான நவ.26 அன்று, விவசாயிகளிடம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேறாத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், தமிழ கத்தில், தில்லியின் முகவ ராக செயல்பட்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆளுநரை கண்டித்தும் இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகைகளை நோக்கி விவ சாயிகள் பேரணி நடத்தப் பட வேண்டும் என ஐக்கிய  விவசாயிகள் முன்னணியின் தலைமை அழைப்பு விடுத் துள்ளது. இதையொட்டி தமிழ கத்திலும் 26.11.2022 (சனிக்கிழமை) காலை 10  மணியளவில், சென்னையில்  ஆளுநர் மாளிகை நோக்கி  நடைபெறவுள்ள பேரணி யில், தஞ்சாவூர் மாவட்டத் தின் அனைத்து ஒன்றியங்க ளிலிருந்தும், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங் கேற்பது, நவ.22, 23, 24 தேதிகளில் அனைத்து ஒன்றி யங்களிலும் விவசாயிகளை யும், பொதுமக்களையும் சந்தித்து துண்டுப் பிரசு ரங்கள் வழங்குவது, தெரு முனை பிரச்சாரம் செய்வது  எனவும் முடிவு செய்யப்பட் டது.