districts

img

காணாமல் போன சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி. பாராட்டு

பெரம்பலூர்,  ஆக.27 - பெரம்பலூரில் காணா மல் போன 13 வயது சிறு மியை போலீசார் கண்டு பிடித்து அவரது பெற்றோரி டம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம், மலையப்ப நகரைச் சேர்ந்த வர் அமிதாப்பச்சன். இவரது மகள் பெரம்பலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வரு கிறார். கடந்த ஆக.21 அன்று காலை 8.30 மணிக்கு, அவரை அமிதாப்பச்சன் பள்ளிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மகள் பள்ளிக்குச் செல்லவில்லை; மீண்டும் வீட்டிற்கும் வரவில்லை என்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் அமிதாப்பச்சன் புகார் அளித்தார். அதனடிப்படையில், பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசா ரணை மேற்கொண்டனர். இதன்படி அச்சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை வைத்து தேடி வந்த  தனிப்படையினர், பெரம்பலூர் ஆட்டோ ஓட்டு நர்களிடமும், நகரத்தில் உள்ள கடைகளிலும் விசாரித்தனர். மேற்படி சிறுமியை பற்றி ஏதே னும் தகவல் தெரிந்தால், காவல்நிலையத்திற்கு தெரிவிக்குமாறும் கூறினர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையத் தில் சிறுமியை கண்ட திருப்பெயரைச் சேர்ந்த  ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (38), சிறுமியை  பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் முன்னி லையில் பெரம்பலூர் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். பின்னர் சிறுமியின் பெற்றோரை வர வழைத்து, அவர்களிடம் அச்சிறுமியை பத்திர மாக ஒப்படைத்ததுடன், இந்த நற்செயலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். எஸ்.பி. பாராட்டு காணாமல் போன பள்ளிச் சிறுமியை ஒப்படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகரக்குழு உறுப்பினரும், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவருமான கிருஷ்ணகுமாரை, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாராட்டினார். மேலும், ஆட்டோ ஓட்டு நர் கிருஷ்ணகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின்  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.