districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, பிப்.23 - இந்திய அரசியலமைப்பு  சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மத நல்லிணக் கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில், வியாழனன்று பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  பிரச்சாரக் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி அன்வர் உசேன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் சார் லஸ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத் துணைத் தலைவர் ஷேக் மொய்தீன் நன்றி கூறினார்.