புதுக்கோட்டை,ஆக.29- ரூபாய் 5.48 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாநில அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் வியாழக் கிழமை அடிக்கல்நாட்டினர். ஒருங்கிணைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் ரூ .548.19 இலட்சம் மதிப்பீட்டில் புதி தாகக் கட்டப்படவுள்ள புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்ட டப் பணி அடிக்கல்நாட்டு விழா வியாழக்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலை மை வகி;த்தார். கந்தர்வ கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை முன்னிலை வகித்தார். மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சுழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். புதுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ. பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா,ராஜேந்திரதுரை, பேரூ ராட்சித் தலைவர் உ.முருகேசன், வட்டாட்சி யர் ஜபருல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.