districts

img

பாசிச பாஜக அரசை வீழ்த்த வேண்டும்

கரூர், மார்ச் 31- கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக செ.ஜோதிமணி போட்டி யிடுகிறார்.  இவர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், திருக் காம்புலியூர், செங்குந்தபுரம், ஐந்து ரோடு, அண்ணாநகர், பசுபதிபாளையம்,‌ கொளந்தானூர், திண்ணப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகை யில், “திமுக தலைமையிலான இந்தியா  கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாள ராக‌ கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் செ.ஜோதிமணி, மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில்  வாக்களித்து பெற செய்ய வேண்டும்.  மோடி தலைமையிலான மக்கள் விரோத, பாசிச பாஜக ஒன்றிய அரசை  நாம் அனைவரும் வீழ்த்திட வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். வேட்பா ளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவர், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகளவில் நிதிகளை பெற்று  பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்து வார்” என்றார். கரூர் நாடாளுமன்ற திமுக தொகுதி பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி.,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, திமுக  கரூர் மத்திய நகரச் செயலாளர் கனக ராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கரூர் வேட்பாளர் செ.ஜோதிமணி செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்து  வருகின்றனர்.