ஒட்டன்சத்திரம், ஆக.5- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பழனி சாலையில் முஸ்லிம் ஜமாத் டவுன் புது பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு டவுன் பள்ளிவாசல் தலைவர் பஷீர் அஹமது வரவேற்று பேசினார். திண்டுக்கல் மாவட்ட அரசு காஜி முகம்மதுஅலி துவக்கி வைத்து பேசினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று டவுன் புது பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் அனைத்து மதத் தலைவர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பேசினர். டவுன் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் ஜாப்பர் நன்றி கூறினார்.