திருச்சிராப்பள்ளி, ஆக.20 -
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மக்கள் விரோத, பாசிச ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக ஞாயி றன்று மாநிலம் முழுவதும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற போராட்டத் தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதா வது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் கோப்புகளை தமிழக ஆளுந ருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த கோப்புகளை அவர் நிராகரித்தார்.
நீட் தேர்வு என்பது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு என்ற கனவை எட்டாக் கனி யாக்கிவிட்டது. நீட் தேர்வுக்காக தற்போது இந்தியாவில் பல தனியார் கோச்சிங் சென்டர்கள் உருவாகி உள்ளன. பள்ளியில் குறைந்த மதிப் பெண் எடுத்தாலும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் கோச்சிங் சென்ட ரில் பயிற்சி பெற்று, எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பை தொடர்கிறார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நசுக் கப்படுகிறது. திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வ தும் என அதிமுக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட் டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது.
நீட் தேர்வால் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங் களை தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத் தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
திருவாரூர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவா ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், மாநில தக வல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி. ஆர்.பி.ராஜா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.