தஞ்சாவூர், பிப்.29 - தஞ்சாவூர் மாநகராட்சி யில் 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ. 20 கோடிக்கு உபரி நிதி நிலை அறிக்கை வியாழக் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் இரா.மகேஸ்வரி முன்னிலையில் மாமன்றக் கூட்டம் வியாழக் கிழமையன்று நடைபெற் றது. இதில், 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் சண்.ராமநாதன் தாக்கல் செய்து பேசியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி யில் 2024 - 25 ஆம் நிதியாண் டில் வருவாய் மற்றும் மூல தன நிதிப் பிரிவில் ரூ. 313.12 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் பிரிவில் ரூ. 27.16 கோடிக்கும், கல்வி நிதிப் பிரிவில் ரூ. 4.17 கோடிக்கும் என மொத்தம் ரூ. 344.46 கோடிக்கு வரவினம் கணக் கிடப்பட்டுள்ளது. இதேபோல, வருவாய் மற்றும் மூலதன நிதிப் பிரி வில் ரூ.296.85 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் பிரிவில் ரூ. 23.31 கோடிக் கும், கல்வி நிதிப் பிரிவில் ரூ.4.04 கோடிக்கும் செலவி னம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த வர வினங்கள் ரூ. 344.46 கோடி யும், செலவினங்கள் ரூ.324.22 கோடியும் எதிர் பார்க்கப்படுவதால், இந்த முறை ரூ. 20.24 கோடிக்கு உபரி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள் ளது” என்றார். கூட்டத்தில் சலசலப்பு: இதைத்தொடர்ந்து, கூட் டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்: கே. மணிகண்டன் (அதிமுக): உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் படுவதாகக் கூறப்படும் நிலையில், மாநகரில் 3 மாதங்களாக சாலை உள்பட எந்தப் பணியும் நடைபெற வில்லை என்றார். மேயர்: தவறான தகவல் கூற வேண்டாம். இந்த ஆட்சியில் தஞ்சாவூர் மாநக ரில் 80 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மணிகண்டனுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. கே. மணிகண்டன்: திரு வள்ளுவர் வணிக வளா கம், காந்திஜி வணிக வளா கத்தில் கடைகள் தொடர் பான ஏலம் கடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் நடத்தப்படும் ஏலத் தில் முந்தைய ஏலதாரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். ஆணையர்: ஏலதாரர்கள் விதிமீறல் செய்யவில்லை. நிர்வாகத் தரப்பில்தான் விதிகள் சரியாகப் பின் பற்றப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி நிர் வாக இயக்குநர் அலுவல கத்துக்கு தகவல் அனுப்பப்பட் டுள்ளது. அவர்கள் நட வடிக்கை எடுப்பர். வெளிநடப்பு வெ.கண்ணுக்கினியாள் (அமமுக): பூக்காரத் தெருவில் சாலை சரியாக அமைக்கப்படவில்லை. இரு நூறு மீட்டர்களில் 100 மீட்டர் அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளது. மாதா கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து கழிவு நீர்வழிந்து செல்வதைத் தடுக்க வேண்டும் என்றார். கழிவு நீர் வழிவதைத் தடுக்க உடனடியாக அலு வலர்களை அனுப்பி நட வடிக்கை எடுப்பதாக மேயர் கூறினார். இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அதிருப்தியடைந்த கண்ணுக்கினியாள் கூட்டத் திலிருந்து வெளிநடப்பு செய்தார்.