மயிலாடுதுறை, செப்.22- மயிலாடுதுறையில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவ லக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை அமைச்சர் எ.வ.வேலு புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். மயிலாடுதுறையில், 2,82, 883.09 சதுர அடி பரப்பளவில் கீழ்தளம் அல்லாமல் 7 தளங்களு டன் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.