districts

பாலியல் குற்றங்களை தடுக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருச்சிராப்பள்ளி, டிச.6 - அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் புதிய கிளை திருச்சி உறையூரில் தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையின் பேரவை ஞாயிறன்று உறையூரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு லலிதா தலைமை வகித்தார். மாநகர்  மாவட்ட செயலாளர் சரஸ் வதி துவக்க உரையாற்றி னார். மாநகர் மாவட்ட தலை வர் ரேணுகா வாழ்த்துரை வழங்கினார். மாநில துணை  செயலாளர் கீதா நிறைவுரை ஆற்றினார்.  கூட்டத்தில் பள்ளியில் பாலியல் குற்றம் நடைபெறு வதை தடுக்கும் வகையில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உறையூர் காவல்கார தெருவில் 40 ஆண்டு காலமாக மின் வசதி இல்லாமல் வசிக்கும் 12 குடும்பங்களின் வீடுகளுக்கு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  கூட்டத்தில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். உறையூர் பகுதி குழு செய லாளராக லலிதா, தலைவ ராக சிவகாமி, பொருளாள ராக ரஹமத் மற்றும் 13 பேர்  கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது.