districts

img

பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி மாதர் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30 - திருச்சி மாநகராட்சி அபி ஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 23  ஆவது வார்டு தேவர் காலனி பகுதி யில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. இத்தொட்டி சற்று மறைவான பகுதியில் அமைந்துள்ளதால் சமூக விரோதிகள் கூடி இந்த இடத்தை மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தொட்டியின் குழாய்களை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இங்குள்ள பெண்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது.  இந்நிலையில் தொட்டியை சரி செய்து பொதுமக்களின் பயன் பாட்டுக்கு கொண்டு வர வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேற்கு பகுதிச் செயலாளர் வள்ளி தலைமையில், கடந்த இரண்டு நாட்களாக பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.  இந்த கோரிக்கை மனுவை மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மேற்கு பகுதி செயலா ளர் வள்ளி, கிளைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் பொதுமக்கள், இளநிலை பொறியாளர் ரமே ஷிடம் செவ்வாயன்று வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், ஒரு வாரத்திற்குள் தொட்டியை  சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.