districts

img

குற்றவாளிகளை கைது கோரி மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல்

கரூர், ஜூன் 8-

      கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் வட்டம் ராசாகவுண்டனூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (72). இவரது மனைவி சடையம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

   அதே போன்று கருப்  பண்ணனின்  தம்பி காத்தவராயன் (60). இவரது மனைவி பழனி யம்மாள், மகன் சக்திவேல் உள்ள னர்.  அண்ணன், தம்பியான கருப்  பண்ணன், காத்தவராயன் ஆகியோ ருக்கு நில பிரச்சனை இருந்து வந்  துள்ளது. இதனால் கடந்த 10 நாட்க ளாக இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள் ளது.  

    கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட சண்டையில் காத்தவராயன், அவ ரது மனைவி, மகன் ஆகியோர் கருப்பண்ணனின் மனைவி சடை யம்மாளை கடுமையாக தாக்கி  உள்ளனர். இதில், காயமடைந்த சடையம்மாளை கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில், கடந்த புதனன்று  காலை தனியாக இருந்த கருப்பண்  ணனை காத்தவராயன், அவரது மனைவி பழனியம்மாள், மகன்  சக்திவேல் ஆகியோர் கருப்பண்ண னின் கை, கால்களை கட்டி எரித்து கொலை செய்துள்ளனர்.

     இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல்துறையினர் உட னடியாக சம்பவ இடத்திற்கு சென்று  கருப்பண்ணனின் உடலை மீட்டு  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு உடல்கூராய் விற்காக அனுப்பி வைத்தனர்.

சிபிஎம் மறியல்

      கருப்பண்ணனை கொலை செய்த அவரது தம்பி காத்தவ ராயன், இவரது மனைவி பழனி யம்மாள், மகன் சக்திவேல் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது  கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு தலைமையில் கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காந்தி கிராமத்தில் சாலை மறியல் போராட்  டம் நடைபெற்றது.  

    போராட்டத்தில் கிருஷ்ணராய புரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்ம லிங்கம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி. ஜீவானந்தம், வாளையல்காரன் புதூர் கட்சி கிளை செயலாளர் சுப்பு லட்சுமி, சக்திவேல் மற்றும் உறவி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடற்கூராய்வு பரிசோதனை  முடிந்த பின்பு அதன் முடிவை வைத்து கொலை வழக்காக பதிவு  செய்வதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக வும் தெரிவித்தனர்.

    பின்னர் உடற்கூராய்வு பரி சோதனை முடிந்ததும், போலீசார்  தெரிவிக்கையில், கருப்பண்ண னின் தலையில் பலத்த அடிபட்டுள் ளதாகவும், அவரை நெருப்பு வைத்து எரித்துள்ளதாகவும் தெரி வித்தனர்.  

   எனவே குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்வதாக கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் மாஜோதிபாசுவிடம் காவல் துறையினர் உறுதியளித்தனர். இத னையடுத்து போராட்டம் கைவிடப்  பட்டது.