கும்பகோணம், டிச.26- திருவிடைமருதூர் வட்டாரம் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி இயற்கை சூழல் அமைப்பு சார்ந்த நெல் பண்ணைப்பள்ளி தொழில்நுட்ப பயிற்சி முகாம் வில்லியவரம்பல் கிராமத்தில் நடைபெற்றது வேளாண்மை உதவி அலுவலர் சாத்தாவு வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தலைமை வகித்து பேசுகையில், ‘‘குறைந்த செலவில் அதிகமாக நெல் இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற வேண்டும். இதற்காக விவசாயிகள் அனைவரும் நெல் சாகுபடியில் வயல் சூழல் அமைப்பு சார்ந்த முறையில் பண்ணை பள்ளி பயிற்சியில் விவசாயிகள் 5 குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு, வயல் சூழல் ஆய்வு செய்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கண்காணிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். அம்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் வேத நாராயணன் சங்கீதா ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.