districts

img

தமுஎகசவின் இலக்கிய அமர்வு

திருவாரூர், ஜுன் 3- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக  ஞாயிறன்று இலக்கிய அமர்வு நடைபெற்றது.  கூத்தாநல்லூர் ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற அமர்வுக்கு, தமுஎகச கிளைத் தலைவர் கே.டி.எம்.நூர் முஹம்மது தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மு.செல்வராஜ் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் மு.செளந்தராஜன் நோக்க உரை யாற்றினர். புத்தகம் புரட்டிப் போடும் “நெம்புகோல்’ என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் புத்தகம் வாசிப்பு, கவிதை வாசித்தல், பாடல்கள் இசைக்கப் பட்டன. தி.விவேகானந்தன் நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;