அரியலூர், ஜூலை 29 -
பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளை ஞரை ஊர்மக்கள் காலில் விழ வைத்த, சாதி வெறியர்களின் வன்கொடு மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வன்மையாக கண்டிக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அரிய லூர் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாளரகுறிச்சி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக, ஆதிச்சநல்லூர் கிராமத்திலிருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக தாய்மாமன் சீர் கொண்டு வந்துள் ளனர்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடி யாத சாதி வெறியர்கள், பட்டியலின கிராம நாட்டார்களை அழைத்து, எங்கள் தெரு வழியாக வாணவேடிக்கை சீர்வரிசை எடுக்கக் கூடாது. வெடி வெடித்த திருநாவுக்கரசர் என்பவரை வரச் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அரசியல் பிரமுக ரான அன்பழகன் என்பவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட பட்டியலின இளைஞர் ஒருவர், கலவரம் நடக்கும் சூழல் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக, காவல்துறையினர் இரு தரப்பின ரையும் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானமாக போக வேண்டு மென வலியுறுத்தி உள்ளனர்.
பேச்சுவார்த்தை என்ற பெயரில், காவல் நிலையத்திற்கு அருகில் பட்டி யல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் திரு நாவுக்கரசை, ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ள னர். இந்த சம்பவம் மிகவும் கொடூர மானது.
இது சம்பந்தமாக இரும்புலிக் குறிச்சி காவல் நிலையத்தில் திருநாவுக் கரசர் கொடுத்த புகாரின் பேரில், தினேஷ் என்ற இளைஞர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதில் தினேஷ் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற நபர்களை தேடி வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு
இரும்புலிக்குறிச்சி காவல் துறையி னர் முன்னிலையில் இக்கொடூரமான சம்பவம் நடந்திருக்கக் கூடிய பின்னணி யில், சாதி வெறியர்களுக்கு ஆதரவா கவே காவல்துறையினர் செயல்பட்டிருப் பது தெளிவாகத் தெரிகிறது. இதில் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத் தில் பணியில் இருந்த காவலர்களும் குற்றவாளிகள் ஆவர். எனவே அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இதுபோன்ற விரும்பத்தகாத சம்ப வங்கள் அரியலூர் மாவட்டத்தில் தொ டர்ந்து நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இதில் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. ஆகவே சம்பந்தப் பட்ட கிராமத்தில் அமைதியை நிலை நாட்டவும், விரும்பத் தகாத சம்பவங் களை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை கைது செய் வதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும். அந்த கிராமத்தில் சாதிய மோதல்கள் ஏற்படாத வண்ணம், மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற தீண் டாமை கொடுமைகளின் வடிவம் இருப்பது குறித்து, ஆய்வுகளை மேற் கொண்டு, அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரி யலூர் மாவட்டக் குழு கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.