districts

img

தோழர் எம்.செல்வராஜ் எம்.பி.,உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

திருவாரூர்,மே 13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் உடல் நலக்குறைவால் மே 13 திங்களன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் சித்தமல்லி கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,  அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை நாடாளுமன்ற தொகுதியின் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

;