கும்பகோணம், டிச.27 - தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் 60 ஆண்டு களுக்கு மேலாக பெரிய தெருவில் பள்ளிவாசல் அமைந்து இருந்தது. இதில் திரளான ஜமாத்தார்கள் தொழுகை நடத்தி வந்த நிலையில் பள்ளிவாசலின் கட்டிட தன்மை பாதிக்கப்பட் டது. இதனால், புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணி தொடங்க ஜமாஅத் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பெரிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. விழாவிற்கு ஜமாஅத் தலைவர் ஒய்.எஸ்.ஏ. அப்துல் காதர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தொழில் அதிபர்கள் நோபில் மரைன் எம்.ஷாஹுல் ஹமீது, ஆசியா தங்க மாளிகை நிறுவ னர் எம்.ஜெகபர் சாதிக், இன்ஜினியர் எம்.என். முஹமது ரபி ஆகியோர் பங்கேற்றனர். நீடூர் மிஸ்பாஹி ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றி னார்.