districts

img

ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்களை திரும்பப் பெறுக

திருச்சிராப்பள்ளி, ஜூலை, 10-  சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டி ஒன்றிய பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியா முழு வதும் தமிழகத்திலும் அனை த்து மாவட்ட நீதிமன்றங்களி லும் வழக்கறிஞர்கள் போ ராட்டம் நடத்தி வருகிறார் கள். தமிழகம் முழுவதும் புதனன்று வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ரயில் மறியல் போ ராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மதியழகன் தலைமை  தாங்கினார். ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ரயில் மறியல் போராட்டத்தில் சங்க செயலாளர் சுகுமார், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், செயற் குழு உறுப்பினர் முத்துமாரி, மூத்த வழக்கறிஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஈடுபட்ட னர். அவர்களை காவல் துறையினர் கைது செய்த னர். போராட்டத்தை முன்னி ட்டு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.