districts

img

குமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர், ஆக.1-  

    கன்னியாகுமரி வாழைப்பழம்,  ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை என மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்  துரிமை வழக்கறிஞர் சங்கத் தலை வர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அறிவு சார் சொத்து ரிமை வழக்கறிஞர் சங்கத் தலை வர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களி டம் கூறுகையில், இம்மூன்று பொருட்  களை உற்பத்தி செய்யும் உற்பத்தி யாளர்கள், நெசவாளர்கள், விவ சாயிகள் இவர்களின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களின் விற்  பனை விலை உயரும். இப்பொருட்க ளுக்கென்று உள்ள தனி சட்டப் பாது காப்பு கிடைக்கும். இப்பொருட் களை உலக அளவில் விற்பனை செய்  வதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கும். எனவே குறிப்பிட்ட இடங்  களில் உற்பத்தி செய்யும் பகுதியை  தவிர, மற்ற பகுதியில் வேறு யாரா வது தயாரித்து அந்தப் பொருளை விற்கும்போது, இந்த குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியாது.

   விரைவில் தஞ்சாவூரைச் சேர்ந்த  திருவையாறு வாழை இலை, தஞ்சா வூர் பாம்பே அல்வா உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இருக்கிறேன்.

   இதே போன்று காவேரி படுகை யில் அமைந்துள்ள மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட் டங்களில் கிடைக்கக் கூடிய தனிச்  சிறப்புடைய விவசாயம், இயற்கை யால் ஆன கைவினை, கைத்தறி,  உணவுப்பொருட்கள் போன்ற வற்றை அடையாளம் கண்டறிந்து  அவற்றையும் புவிசார் குறியீடு பதி வகத்தில் விண்ணப்பிக்க உள்ளேன். இதனால் தமிழ்நாட்டிலேயே அதிக  புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில்  டெல்டா மாவட்டமும் இடம்பெறும்” என்றார்.

கன்னியாகுமரி  மட்டி வாழைப்பழம்

      மருத்துவ குணம் கொண்ட மட்டி  ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு  சக்தி கொண்டவை என்பதால், பச்சி ளம் குழந்தைகள் முதல், நோயாளி கள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்  தில் தான் காணப்படும். மட்டி வாழை  மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்புச் சுவையும் மண மும் கொண்டதாக மட்டி வாழைப் பழம் இருப்பதால் குமரி மாவட்டத்  தில் மட்டிப் பழத்தை குழந்தை களுக்கு விரும்பி கொடுப்பார்கள்.  

ஜடேரி நாமக்கட்டி

   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ளது ஜடேரி.  இக்கிராமத்தில் வாழும் 150 குடும்பங்  களில் 100 குடும்பத்தினர் நாமக்கட்டி  செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள னர். நாமக்கட்டி தயாரிப்புக்கு ஆதா ரமாக இருப்பவை வெள்ளைப் பாறைகள். இவை ஜடேரி அருகே  உள்ள தென்பூண்டிப்பட்டு கிராமத் தில் உள்ளன. வெள்ளைப் பாறை களை வெட்டி எடுத்து, சிறு சிறு கட்டி களாக உடைத்து பின் நாமக்கட்டி களை தயாரிக்கின்றனர்.

செடி புட்டா சேலை

     திருநெல்வேலி மாவட்டம் வீரவ நல்லூர் பகுதியில் சௌராஷ்ட்ரா இன மக்களால் உருவாக்கப்பட்டது செடி புட்டா சேலை. இந்த சேலை  வெயில் காலத்தில் குளிர்ச்சியாக வும், குளிர் காலத்தில் இதமான வெப்பமாகவும் இருப்பதாக சேலை யை உடுத்தும் பெண்கள் உணர்கின்ற னர். பெரும்பாலும் இச்சேலையில் செடியும் பூக்களும் நிறைந்த டிசைன் கள் மட்டுமே இருக்கும்.